மகிழ்ச்சி…வெறும் 90 வினாடிகளில் மண்ணின் ஆரோக்கியத்தைக் கண்டறியும் கையடக்க கருவி – ஐஐடி கான்பூர் கண்டுபிடிப்பு!

Published by
Edison

கான்பூர்:வெறும் 90 வினாடிகளில் மண்ணின் ஆரோக்கியத்தைக் கண்டறியும் ஒரு சிறிய சோதனைக் கருவியை ஐஐடி கான்பூர் கண்டுப்பிடித்துள்ளது.

கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகமானது(ஐஐடி கான்பூர்), வெறும் 5 கிராம் மண்ணை ஒரு டெஸ்ட் மாதிரியாகப் பயன்படுத்தி மொபைல் செயலி மூலம் வெறும் 90 வினாடிகளில் மண்ணின் ஆரோக்கியத்தைக் கண்டறியும் ஒரு சிறிய சோதனைக் கருவியை உருவாக்கியுள்ளது.ஐஐடியில் வேதியியல் பொறியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஜெயந்த் குமார் சிங், பல்லவ் பிரின்ஸ், அசார் அகமது, யஷஸ்வி கெமானி மற்றும் முகமது அமீர் கான் ஆகியோர் அடங்கிய குழுவால் இந்த சாதனம் உருவாக்கப்பட்டது.

இந்த முதல் வகை கண்டுபிடிப்பானது, இன்ஃப்ராரெட் ஸ்பெக்ட்ரோஸ்கோபி தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது.இந்த கருவி ‘பு பரீக்ஷக்’ என்ற மொபைல் அப்ளிகேஷன் மூலம் ஸ்மார்ட்போன்களில் நிகழ்நேர மண் பகுப்பாய்வு முடிவுகளை வழங்குகிறது.பு பரீக்ஷக் அப்ளிகேஷன்(Bhu Parikshak) கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது என்று ஐஐடி-கான்பூர் தெரிவித்துள்ளது.

மேலும்,இந்த சாதனம் மொபைல் ஆப் மூலம் பயனர்களுக்கு ஏற்றதாக உருவாக்கப்பட்டுள்ளது.இது உள்ளூர் மொழிகளில் கிடைக்கிறது.இதனால் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் கூட சாதனத்தையும் மொபைல் பயன்பாட்டையும் எளிதாகக் கையாள முடியும் என்று ஐஐடி-கான்பூர் தெரிவித்துள்ளது.

கருவி செயல்படும் முறை:

இந்த கையடக்க மற்றும் கம்பியில்லா மண் பரிசோதனை சாதனத்திற்கு,ஐந்து கிராம் உலர் மண் தேவைப்படுகிறது. 5 செமீ நீளமுள்ள உருளை வடிவ இந்த சாதனத்தில் மண்ணை நிரப்பியவுடன், அது புளூடூத் மூலம் மொபைலுடன் தன்னை இணைத்துக் கொண்டு 90 வினாடிகளுக்கு மண்ணை பகுப்பாய்வு செய்யத் தொடங்குகிறது.

இதனைத் தொடர்ந்து,பகுப்பாய்விற்குப் பிறகு அதன் முடிவுகள் மண் சுகாதார அறிக்கையின் வடிவத்தில் மொபைல் திரையில் தோன்றும். மேலும்,பரிந்துரைக்கப்பட்ட அளவு உரங்களுடன் அறிக்கையும் வருகிறது.குறிப்பாக,நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஆர்கானிக் கார்பன் உள்ளிட்ட ஆறு முக்கியமான மண் அளவுருக்களை இந்த சாதனம் கண்டறிய முடியும்.அதே சமயம்,வயல் மற்றும் பயிர்களுக்கு தேவையான அளவு உரங்களையும் இந்த சாதனம் பரிந்துரைக்கிறது.

இது தொடர்பாக,ஐஐடி கான்பூர் நிறுவன இயக்குனர் அபய் கரண்டிகர் கூறுகையில், “விவசாயிகள் எங்கள் பராமரிப்பாளர்கள், அவர்கள் பல இன்னல்களை எதிர்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு கஷ்டம் அவர்கள் மண் பரிசோதனை செய்து முடிவுக்காக பல நாட்கள் காத்திருக்கும் அவலம். இனி இந்த அவலம் அவர்களுக்கு இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

14 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

15 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

16 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

16 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

16 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

16 hours ago