IIT டெல்லி:1 மணி நேரத்திற்குள் டெங்குவைக் கண்டறியும் புதிய கருவி..!

Default Image

IIT டெல்லி- ஒரு மணி நேரத்திற்குள் டெங்கு உள்ளதா?,இல்லையா? என்ற முடிவுகளை வழங்கும் கருவியை உருவாக்கியுள்ளது.

டெல்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (IIT) ஆராய்ச்சியாளர்கள் டெங்கு நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான கையடக்க கருவியைக் உருவாக்கியுள்ளனர். இந்த கருவியானது ஒரு மணி நேரத்தில் டெங்கு சோதனை முடிவை வழங்குகிறது. புனே தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனம்(ICMR) மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மலேரியா ரிசர்ச் (NIMR) உடன் இணைந்து IIT ஆராய்ச்சியாளர்கள் நூற்றுக்கணக்கான இரத்த மாதிரிகளை பரிசோதித்து ஒரு மணி நேரத்திற்குள் டெங்கு முடிவுகள் குறித்து அறிக்கை வெளியிட்டனர்.

டெங்கு போன்ற பொதுவான நோய்களுக்கு விரைவான நோய் கண்டறிதல் கருவி தேவைப்படுகிறது, ஆனால் இதற்கு விலையுயர்ந்த உபகரணங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தேவைப்படுகின்றன என்று டெல்லியின் IIT ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த ஆராய்ச்சி பணிகளுக்கு தேவையான நிதியுதவி ‘IMPRINT இந்தியா’ திட்டத்தின் மூலம்  பெறப்பட்டது என்றும் கூறியுள்ளனர்.

இந்த புதிய கருவிப் பற்றி பேசிய பேராசிரியர் PM.சிங், “இந்த அல்ட்ரா-சென்சிட்டிவ் மற்றும் எளிமையான சாதனம் வைரஸ் நோய்களைக் கண்டறிந்து, ஒரு மணி நேரத்திற்குள் இறுதி முடிவுகளை வழங்கும் திறன் கொண்டுள்ளது”,என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
L2E EMPURAAN
Arvind Kejriwal - Manish sisodia
Seethalakshmi - NOTA
Virat kohli - Harbajan singh - Shreyas Iyer
prison break rashid khan
Rahul gandhi - Thirumavalavan - Arvind Kejriwal