சட்டமன்ற தேர்தலில் பாஜக மேற்கு வங்காளத்தை விளையாட்டு மைதானமாக நினைத்தால், இந்த தேர்தலில் நான் கோல் கீப்பராக இருப்பேன்.
இன்னும் ஒரு சில மாதங்களில் மேற்கு வங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அந்த மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி அவர்கள் ஹுக்ளியில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர்,பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய கலகக்காரர். அமித்ஷாவும், நரேந்திர மோடியும் நாடு முழுவதும் பொய்யையும் வெறுப்பையும் தான் பிரச்சாரம் செய்து வருகின்றனர். வன்முறை மூலம் எதையும் சாதிக்க முடியாது என்றும், அமெரிக்க அதிபர் டிரம்ப் இதைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி எதிர் கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சட்டமன்ற தேர்தலில் பாஜக மேற்கு வங்காளத்தை விளையாட்டு மைதானமாக நினைத்தால், இந்த தேர்தலில் நான் கோல் கீப்பராக இருப்பேன். பாஜகவால் ஒரு கோல் கூட அடிக்க முடியாது என்றும், வங்காளம் மட்டுமே வங்காளத்தை ஆளும் என்றும், பாஜக மேற்குவங்கத்தில் தோல்வியடைந்தால், நாட்டிலிருந்து நிச்சயமாக தூக்கி எறியப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…
ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பராபரையும்…
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…