அசாம் மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி அசாம் மக்கள் தொகை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் கொள்கை மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன் படி 2 குழந்தைகளுக்கு மேல் இருக்கும் பெற்றோர்கள் அரசு வேலை வேலை கிடையாது என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இந்த விதிமுறை வருகின்ற 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. மக்கள்தொகை சரிபார்க்கும் நோக்கில் இந்த கொள்கை கொண்டுவர உள்ளதாக நேற்று முன்தினம் மாலை அசாம் மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் அரசு பணிக்கு விண்ணப்பிக்க முடியாது.அதே போல் தற்போது அரசு பணியில் இருக்கும் அதிகாரிகளும் இந்த விதியைப் பின்பற்ற வேண்டும் என மாநில அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து அம்மாநில அமைச்சர் ஒருவர் கூறுகையில் , “நிலத்தில் இருக்கும் நெருக்கடியை குறைக்கவே இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது நிலம் இல்லாத குடும்பங்களுக்கு நிலம் அளிக்க திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…