Categories: இந்தியா

எங்கள் சென்டரில் படிக்கவில்லையெனில் எதிர்காலம் பாழாகிவிடும்! பெற்றோர்களை மிரட்டும் பைஜூ’ஸ்.!

Published by
Muthu Kumar

குழந்தைகளிடம் மொபைல் எண்களை வாங்கி பெற்றோர்களை, பைஜூ’ஸ் மிரட்டுவதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பிரபல ஆன்லைன் கற்றல் தளமான பைஜூ’ஸ், அதன் வாடிக்கையாளர்களை அதிகரிக்க குழந்தைகளின் பெற்றோர்களை மிரட்டி வருவதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தெரிவித்துள்ளது. இது குறித்து ஆணையத்தின் தலைவர் கூறியதாவது, பைஜூ’ஸ் நிறுவனமானது ஆரம்ப நிலை கற்கும் குழந்தைகளை குறி வைக்கின்றனர்.

மேலும் குழந்தைகளிடம் அவர்களின் பெற்றோர்களின் தொலைபேசி எண்களை வாங்கி, எங்கள் கற்றல் தளத்தில் குழந்தைகளை சேர்ந்து படிக்கவைக்குமாறும், இல்லையெனில் அவர்களின் எதிர்காலம் பாழாகிவிடும் என்று மிரட்டுகிறார்கள்.

இது குறித்து வந்த பல பெற்றோர்களின் புகார்களின் அடிப்படையில் விசாரித்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், பைஜூ’ஸ் சி.இ.ஓ ரவீந்திரனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது, என்று ஆணையத்தின் தலைவர் கூறினார். மாணவர்களுக்கு பாடப்பிரிவுகளை தவறாக விற்பதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக டிசம்பர் 23 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் இந்த பைஜூ’ஸ் விற்பனை குழுவானது, பெற்றோர்களிடம் தங்களது பாடப்பிரிவுகளை விற்க, கடன் அடிப்படையிலான பாட ஒப்பந்தங்களில் சேர வாடிக்கையாளர்களை தீவிரமாக ஏமாற்றி வருவதாகவும், பைஜூ’ஸ் குறித்து புகார் வந்துள்ளதாகவும் ஆணையம் தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடர்பான முரண்பாடுகள் குறித்து விளக்கமளிக்க ரவீந்திரனை நேரில் ஆஜராக ஆணையம் கேட்டுக் கொண்டது. ரவீந்திரன், இந்த உத்தரவை மீறினால் பின் விளைவுகளுக்கு அவர் உட்படுத்தப்படுவார் என்றும் ஆணையம் மேலும் கூறியது.

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

8 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

8 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

8 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

8 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

9 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

9 hours ago