இந்தியா

இதை செய்தால் மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகம்.! மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா எச்சரிக்கை.!

Published by
செந்தில்குமார்

சமீப நாட்களாக நாட்டில் மாரடைப்பினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. அதிலும் இப்போது பெரியவர்களை விட 20 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் பெருமளவில் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர். ஒருபுறம் கொரோனாவுக்கு பிறகு நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்பி ராஜுவ் ரஞ்சன் சிங் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார், கொரோனாவுக்கு பிறகு மாரடைப்பு அதிகமாகியுள்ளது என எந்தவித அறிவியல்பூர்வ அறிவிப்பும் இல்லை என எழுத்துபூர்வ பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் சரியான காரணம் தெரியாததால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆனது விரிவான ஆய்வை நடத்தியது. தற்போது அந்த ஆய்வு முடிவுகளைக் குறிப்பிட்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணம் மற்றும் மாரடைப்பு வரமால் தடுப்பதற்கான அறிவுறுத்தலையும் கூறியுள்ளார்.

அதன்படி குஜராத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மன்சுக் மாண்டவியா, “கடுமையான கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 1 முதல் 2 ஆண்டுகள் வரை கடுமையான உடற்பயிற்சி அல்லது ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து வேலைகளில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு செய்யதால் திடீர் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. எனவே மாரடைப்பைத் தவிர்க்க கடுமையான வேலைகளை செய்யக்கூடாது.” என்று கூறியுள்ளார்.

சமீபத்த்தில் கூட, குஜராத் மாநிலத்தில் நடந்த நவராத்திரி விழாவின் போது ‘கர்பா’ நடனம் ஆடிய 10 க்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். இதில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் 20 வயதிற்கு உட்பட்டவர்கள். அதோடு அக்டோபர் மாதம் கெடா மாவட்டத்தில் உள்ள கபத்வஞ்சில் கர்பா நடனத்தின் போது 17 வயது சிறுவன் திடீரென மாரடைப்பால் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!

சென்னை : ஒவ்வொரு நடிகருக்கும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய ஹிட் படங்களாக ஒரு படம் இருக்கும் என்பது…

32 minutes ago

ஐரோப்பிய ஒன்றியம் நம்மளை ஏமாத்துறாங்க! இனிமே 25% வரி..டொனால்ட் ட்ரம்ப் அதிரடி!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். அதிகமாக,…

1 hour ago

மெல்ல விடை கொடு மனமே…CT-தொடரிலிருந்து வெளியேறிய இங்கிலாந்து…கண்ணீர் விடும் வீரர்கள்!

லாகூர் : நடந்து கொண்டு இருக்கும் இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது  ரசிகர்களுக்கும் அணி…

2 hours ago

ஈஷா மகாசிவராத்திரி – பக்தியின் மகாகும்பமேளா! சத்குருவைப் பாராட்டிய அமித்ஷா

கோவை :  ஆண்டுதோறும்  மஹா சிவராத்திரி விழா அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈஷா யோகா மையத்தில் நடைபெறும்…

2 hours ago

AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்

லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…

9 hours ago

ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!

கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…

12 hours ago