கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாமிற்கு மாறினால் ‘தலித் இட ஒதுக்கீட்டை பெற முடியாது – சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

Published by
murugan

தலித்துகள் கிறிஸ்தவத்திற்கும், இஸ்லாமியத்திற்கும் மாறினால் தேர்தலில் தலித்துகளுக்கான சலுகைகளை பெறமுடியாது என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

கிறிஸ்தவத்திற்கும் அல்லது இஸ்லாமியத்திற்கும் தலித்து ஒருவர் மாறினால் அவர்  மக்களவை அல்லது சட்டமன்றத் தேர்தல்களில் பட்டியல் சாதியினருக்கான  ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும், இடஒதுக்கீட்டின் வேறு எந்த சலுகைகளும் அவர்களால் பெற முடியாது என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

இருப்பினும், இந்து, சீக்கிய மற்றும் புத்த மதங்களை ஏற்றுக்கொள்பவர்கள் எஸ்சி பிரிவினருக்கு  ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து போட்டியிடுவதற்கும் பிற இட ஒதுக்கீடு சலுகைகளைப் பெறுவதற்கும் தகுதி பெறுவார்கள் என்று பாஜக உறுப்பினர் ஜி.வி எல் நரசிம்ம ராவின் கேள்விக்கு பதிலளித்த பிரசாத் தெளிவுபடுத்தினார்.

ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து போட்டியிடுவதற்கான தகுதி குறித்து பேசிய அமைச்சர் அரசியலமைப்பின் 3 வது பிரிவை சுட்டிக்காட்டி , இந்து மதம், சீக்கியம் அல்லது புத்த மதம் தவிர வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் பட்டியல் சாதியினரின் இடஒதுக்கீட்டைப் பெற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சட்டம்  கூறுகிறது என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எஸ்சி / எஸ்.டி.களை இஸ்லாமியம் அல்லது கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதை பாராளுமன்ற அல்லது சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதைத் தடுக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் எந்தவொரு திருத்தத்தையும் கொண்டு வர எந்த திட்டமும் இல்லை என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

Published by
murugan

Recent Posts

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

1 hour ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

5 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

6 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

6 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

6 hours ago

SLVsNZ : சாதனைப் படைத்த கமிந்து! இலங்கை சுழலில் சிக்கி திணறும் நியூசிலாந்து!

காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…

7 hours ago