கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாமிற்கு மாறினால் ‘தலித் இட ஒதுக்கீட்டை பெற முடியாது – சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

Default Image

தலித்துகள் கிறிஸ்தவத்திற்கும், இஸ்லாமியத்திற்கும் மாறினால் தேர்தலில் தலித்துகளுக்கான சலுகைகளை பெறமுடியாது என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

கிறிஸ்தவத்திற்கும் அல்லது இஸ்லாமியத்திற்கும் தலித்து ஒருவர் மாறினால் அவர்  மக்களவை அல்லது சட்டமன்றத் தேர்தல்களில் பட்டியல் சாதியினருக்கான  ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும், இடஒதுக்கீட்டின் வேறு எந்த சலுகைகளும் அவர்களால் பெற முடியாது என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

இருப்பினும், இந்து, சீக்கிய மற்றும் புத்த மதங்களை ஏற்றுக்கொள்பவர்கள் எஸ்சி பிரிவினருக்கு  ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து போட்டியிடுவதற்கும் பிற இட ஒதுக்கீடு சலுகைகளைப் பெறுவதற்கும் தகுதி பெறுவார்கள் என்று பாஜக உறுப்பினர் ஜி.வி எல் நரசிம்ம ராவின் கேள்விக்கு பதிலளித்த பிரசாத் தெளிவுபடுத்தினார்.

ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து போட்டியிடுவதற்கான தகுதி குறித்து பேசிய அமைச்சர் அரசியலமைப்பின் 3 வது பிரிவை சுட்டிக்காட்டி , இந்து மதம், சீக்கியம் அல்லது புத்த மதம் தவிர வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் பட்டியல் சாதியினரின் இடஒதுக்கீட்டைப் பெற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சட்டம்  கூறுகிறது என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எஸ்சி / எஸ்.டி.களை இஸ்லாமியம் அல்லது கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதை பாராளுமன்ற அல்லது சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதைத் தடுக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் எந்தவொரு திருத்தத்தையும் கொண்டு வர எந்த திட்டமும் இல்லை என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்