இரு நாடுகளின் குடியுரிமை இருந்தால் எப்படி தேசபக்தியை வெளிப்படுத்துவீர்கள் என்று ராகுல் குறித்து பேசியுள்ளார் பாஜகவின் பிரக்யா சிங் தாகூர்.
இந்திய சீனா எல்லை பகுதிகளில் ஒன்றான லடாக் எல்லைபகுதியில், இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக போர்பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் உயிரிழந்தனர்.இதனையடுத்து இரு நாடுகளும் பிரச்சினையை தீர்க்க முயற்சி மேற்கொண்டு வருகின்றது.
ஆனால் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறது.குறிப்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ,20 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதற்கு யார் பொறுப்பு? வீரர்களை ஆயுதமின்றி அனுப்பியது யார்? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
இந்நிலையில் சீன விவகாரத்தில் காங்கிரஸ் நிலைப்பாடு குறித்து பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாகூர் கூறுகையில்,தாய் மண்ணில் பிறந்தவனால்தான் தாய் நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று சாணக்யா கூறினார். அப்படிப் பார்த்தால், வெளிநாட்டுப் பெண்ணிற்குப் பிறந்தவர் எப்படி தேசபக்தராக இருக்க முடியும். இரு நாடுகளின் குடியுரிமை இருந்தால் எப்படி தேசபக்தியை வெளிப்படுத்துவீர்கள் என்று ராகுலை சாடி பேசியுள்ளார்.
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…
சென்னை : நாதகவில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை…
சென்னை : தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, …
சென்னை : சின்னத்திரையில் இருந்து இப்போது முன்னணி நடிகராக வளர்ந்து இருக்கும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறது.…
நடப்பாண்டு சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு…
சென்னை : திமுகவினர் பல்வேறு இடங்களில் மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக…