இது தான் உண்மையில் அமிர்த கால் என்றால், இளைஞர்களின் வேலைவாய்ப்பு எங்கே… ராகுல் காந்தி விமர்சனம்.!

Published by
Muthu Kumar

வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி, மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். 

இந்தியாவில் வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதால், நாட்டில் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி திண்டாடுகின்றனர் என ராகுல் காந்தி ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை புறக்கணிப்பதாக கூறிய ராகுல், ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை வழங்குவதாக உறுதியளித்த வாக்குறுதி என்னவாயிற்று என்று கேள்வியெழுப்பினார்.

மேலும் இது உண்மையில் அமிர்த கால் என்றால் ஏன் வேலைவாய்ப்புகள் குறைந்து விட்டது என்று ராகுல் காந்தி மேலும் கூறினார். 2014ல் 16.9 லட்சமாக இருந்த பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள், 2022ல் 14.6 லட்சமாக குறைந்துள்ளதாக காந்தி சுட்டிக்காட்டினார். இந்த அரசின் கீழ் நாடு வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்கித் தவிக்கிறது.

சில முதலாளித்துவ நண்பர்களின் நலனுக்காக லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கை நசுக்கப்படுகிறது என்று ராகுல் காந்தி மேலும் கூறியுள்ளார். இந்தியாவின் முன்னேற்றப் பாதையை வலுப்படுத்துவதற்கு, பொதுத்துறை நிறுவனங்கள் அரசிடமிருந்து ஆதரவை பெற வேண்டும் அப்போது தான் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும் என்று ராகுல் தெரிவித்துள்ளார்.

Published by
Muthu Kumar

Recent Posts

WI-W vs NZ-W : இறுதி சுற்றுக்கு முன்னேறியது நியூஸிலாந்து மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் முன்னதாக நடைபெற்றப் முதல் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய…

32 mins ago

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…

2 hours ago

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

3 hours ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

4 hours ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

5 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

6 hours ago