பதிவுகளை நீக்காவிட்டால் நடவடிக்கை பாயும் .. ட்விட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!

Published by
murugan

அரசாங்க உத்தரவு இருந்தபோதிலும் ட்விட்டர் ஒருதலைப்பட்சமாக கணக்குகளைத் தடைசெய்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தினத்துக்கு விவசாயிகள் டெல்லியில் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையாக மாறியது. இதனால், விவசாயிகள் அனுமதியை மீறி செங்கோட்டையில் விவசாயிகள் நுழைந்தனர். இதைத்தொடர்ந்து, விவசாயிகள் போராட்டம் நடத்தும்  பகுதிகளில் இணைய வசதியை அரசு துண்டித்தது.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும்  ட்விட்டரில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராக ஆத்திரமூட்டும் ட்வீட்டுகளை வெளியிடும் கணக்குகளை நீக்கு நீக்க மத்திய அரசு ட்விட்டருக்கு அறிவுறுத்தியது.

இதைத்தொடர்ந்து, கடந்த திங்களன்று ட்விட்டர் அரசின் வேண்டுகோளின் பேரில் சில விவசாய ஆர்வலர்கள், சில எதிர்க்கட்சித் தலைவர்கள், பொருளாதார நிபுணர் 250 பேரின்  ட்விட்டர் கணக்குகள் மற்றும் ட்வீட்களை தற்காலிகமாக நீக்கியது. ஆனால், சிறிது நேரத்தில் அந்த கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் மீண்டும் செயல்பட அனுமதித்தது.

இந்நிலையில், அரசாங்க உத்தரவை பின்பற்றவில்லை என ட்விட்டருக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியது. இதுகுறித்து ட்விட்டருக்கு அனுப்பட்ட நோட்டீஸில், அரசாங்க உத்தரவு இருந்தபோதிலும் ட்விட்டர் ஒருதலைப்பட்சமாக கணக்குகளைத் தடைசெய்ததாகவும், ட்விட்டர் ஒரு இடைத்தரகர், அரசாங்கத்தின் வழிகாட்டுதலுக்குக் கீழ்ப்படிய வேண்டிய கட்டாயம். அரசின் உத்தரவை பின்பற்ற மறுத்தால் சட்டரீதியான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

9 mins ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

18 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

3 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

3 hours ago