இனி பசுவை கொன்றால் 10 ஆண்டுகள் சிறை.. 5 லட்சம் அபராதம்- முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி!

Published by
Surya

உத்தர பிரதேச மாநிலத்தில் பசுக்கொலையில் ஈடுபட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நேற்று அம்மாநிலத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பசு வதை தடுப்பு அவசர சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த அவசர சட்டம் தற்போது உள்ள தடுப்பு சட்டம் அதாவது, உத்தர பிரதேச பசு வதை தடுப்பு சட்டம், 1955-ஐ விட மிகவும் வலுவானதாகவும், பயனுள்ளதாகவும் மாற்றுவதையும் அம்மாநில அரசு தெரிவித்தது.

மேலும், பசு வதை தொடர்பான சம்பவங்கள் முற்றிலுமாக நிறுத்துவதையும் நோக்கமாக இந்த சட்டம் கொண்டுள்ளது என அம்மாநில அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி, முதல் முறையாக பசு கொலையில் ஈடுபடுபவருக்கு 1 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும், இரண்டாவது முறை செய்தால் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை மற்றும் ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தது.

அதேபோலவே, பசுக்களை சட்டவிரோதமாக வாகனத்தில் கொண்டு சென்றால் புதிய சட்டத்தின்கீழ், வாகன ஓட்டுநர், உடனிருந்தனர் மற்றும் வாகன உரிமையாளர் ஆகியவரிடம் அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவித்த அரசு, பசுவிற்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட நபர் ஒரு ஆண்டு கடுமையான சிறைத்தண்டனை வழங்கப்படலாம். அதுமட்டுமின்றி, அந்த சிறை தண்டனையை, 7 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம் எனவும் தெரிவித்தது.

Recent Posts

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

5 hours ago

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

7 hours ago

ஐபிஎல் 2025 சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதுதான்? தோனிக்கு இடமிருக்கா?

டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…

7 hours ago

“வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு” – அண்ணாமலை கடும் விமர்சனம்.!

சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…

10 hours ago

“ஒருவித அழுத்தமான சூழல்., ஆனாலும்., ” சுனிதா வில்லியம்ஸ் மீட்பு குறித்து நாசா கருத்து!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர்  ஜூன் மாதம் முதல் சர்வதேச…

10 hours ago

“மொழிகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது” – பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி.!

சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…

11 hours ago