மத்திய அரசு வேளாண் சட்டங்களை நீக்காவிட்டால் மற்ற மாநிலங்களிலும் போராட்டம் பரவும்! ராகுலின் ட்வீட்டிற்கு ஸ்மிருதி ராணி பதிலடி..!

Published by
லீனா

ராகுல் காந்தி இந்திய மக்கள் மீது போரை அறிவித்து உள்ளார். பிரதமருக்கு எதிரான தனது அரசியல் செயல்பாடு பலன் தராவிட்டால் நாடே பற்றி எரியும் என எச்சரிக்கிறார்.

தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து, கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற பேரணியில் காவல்துறையினருக்கும், போலீசாருக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் விவசாயி ஒருவர் உயிரிழந்த நிலையில், காவல்துறையினர் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் ராகுல் காந்தி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில், விவசாயிகள் போராட்டம் வேளாண் சட்டங்களை எதிர்த்து தான். அதுவும் டெல்லி மற்றும் அதை சுற்றி உள்ள எல்லைகள் மட்டும்தான். மத்திய அரசு இந்த சர்ச்சைக்குரிய சட்டங்களை இனியும் திரும்பப் பெறாவிட்டால், மற்ற மாநிலங்களுக்கும் இந்த போராட்டம் மற்றும்  கலவரம் பரவும் என மத்திய அரசை எச்சரித்துள்ளார்.

ராகுல்காந்தியின் ட்வீட்டர் பதிவிற்கு பதிலடி கொடுத்த ஸ்மிருதி இரானி, ‘ராகுல் காந்தி இந்திய மக்கள் மீது போரை அறிவித்து உள்ளார். பிரதமருக்கு எதிரான தனது அரசியல் செயல்பாடு பலன் தராவிட்டால் நாடே பற்றி எரியும் என எச்சரிக்கிறார். நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் ராகுலின் வன்முறை அழைப்பை யாரும் கண்டு கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!

“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!

சென்னை : நாதகவில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை…

24 minutes ago

தூத்துக்குடி உட்பட 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, …

57 minutes ago

எனக்கு அன்னைக்கே தெரியும்..சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து ஷாம் என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை : சின்னத்திரையில் இருந்து இப்போது முன்னணி நடிகராக வளர்ந்து இருக்கும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறது.…

1 hour ago

ரொம்ப மோசமான பார்ம்…இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!

நடப்பாண்டு சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு…

2 hours ago

இந்தி எது ஆங்கிலம் எது ? விமர்சனம் செய்த அண்ணாமலை!

சென்னை : திமுகவினர் பல்வேறு இடங்களில் மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக…

2 hours ago

பாக்., வீரர்களுக்கு சரியான சம்பளம் கொடுக்கலயா? சாம்பியன்ஸ் டிராபி தோல்விக்கு முன்னாள் வீரர் கடும் சாடல்.!

பாகிஸ்தான் : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, முன்னாள் கேப்டனும் பேட்டிங் ஜாம்பவானுமான ஜாவேத் மியாண்டட்…

3 hours ago