நியமன எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தால் அது ஜனநாயக படுகொலை என புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததை தொடர்ந்து, முதல்வர் நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியின் புதிய துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முதல்வர் நாராயணசாமியை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதைதொடர்ந்து, புதுச்சேரி சட்டப்பேரவை நடந்து கொண்டு இருக்கிறது. அதிமுக, திமுக, என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக நியமன எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் சட்டபேரவைக்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில், புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் சட்டபேரவை கூடுவதற்குமுன் செய்தியாளர்களிடம் பேசியபோது, புதுவை மாநில மக்களுக்கு நான் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் புதுவை மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களிடம் உள்ளனர்.
எதிர்க்கட்சியில் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட 11 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்குரிமை அளிக்க கூடாது என்று எங்களது வேண்டுகோள் சபாநாயகர் இதை நிறைவேற்ற வேண்டும். நியமன எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தால் அது ஜனநாயக படுகொலை என தெரிவித்தார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…