நான் சேர்த்து வைத்த நற்பெயரை எல்லாம் இழந்துவிட்டேன் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பேச்சால் பரபரப்பு.
முன்னாள் கர்நாடக முதல்வரும், ஜனதா தளம் (மதச்சார்பற்ற) தலைவருமான எச்.டி.குமாரசாமி காங்கிரஸ் கட்சி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதாவது, காங்கிரசுடன் கூட்டணி வைத்ததன் மூலம் மிகப்பெரிய தவறை செய்து விட்டேன். காங்கிரஸ் கட்சியுடனான எனது கூட்டணி காரணமாக 2006-2007 மற்றும் 12 ஆண்டுகளில் நான் சேர்த்து வைத்த நற்பெயரை எல்லாம் இழந்துவிட்டேன்.
காங்கிரஸுக்கு பதிலாக பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தால், நான் இப்போதுவரை முதல்வர் பதிவில் நீடித்திருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். 2018-ல் முதல்வரான பிறகு ஒரு மாதத்தில் நான் ஏன் கண்ணீர் சிந்தினேன்? என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியும். பாஜக 2013-ல் எனக்கு தீங்கு செய்யவில்லை, காங்கிரஸ் எனக்கு செய்தது தான் என்று பரபரப்பாக பேசியுள்ளார்.
இதனிடையே, ஜே.டி.எஸ் தலைவர் குமாரசாமி முன்பு காங்கிரஸ் கட்சியை ‘குதிரை வணிகம்’ என்று அழைத்திருந்தார். அரசியல் கட்சிகளைப் பிரிப்பதிலும், சட்டமன்ற உறுப்பினர்களை வாங்குவதிலும் காங்கிரஸ் திறமையானவர் என்றும் அதனால்தான் ‘குதிரை வர்த்தகம்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…