ஐ.நா-வில் இந்தியாவுக்கான நிரந்தர தூதராக பணியாற்றி வந்த சயது அக்பரூதின் ஓய்வு பெற்றதை அடுத்து, சென்னையை சேர்ந்த IAS அதிகாரி டி.எஸ்.திருமூர்த்தி அந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் 2016-ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்கான நிரந்தர தூதராக பணியில் இருந்து வந்த சயது அக்பரூதின் ஓய்வு பெற்றார். அவர் ஐ.நாவில் பல்வேறு முக்கிய விவாதம் மற்றும் பிரச்சினைகளில் இந்தியாவின் நிலைப்பாட்டை பலமாக எடுத்துரைத்தார்.0
அதிலும் முக்கியாமாக பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமதை சேர்ந்த மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐநா அறிவிபதற்கு இந்தியா சார்பில் எடுக்கப்பட்ட முயற்சியில் அக்பரூதின் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அக்பரூதின் ஓய்வு பெற்றதால், அந்த பதவிக்கு சென்னையை சேர்ந்த IAS அதிகாரி டி.எஸ்.திருமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 1985ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பேட்ஜில் பயிற்சி பெற்றுள்ளார். கடைசியாக வெளியுறவுத்துறையில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…