ஐநாவில் இந்தியாவுக்கான நிரந்தர தூதராக சென்னையை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம்.!

ஐ.நா-வில் இந்தியாவுக்கான நிரந்தர தூதராக பணியாற்றி வந்த சயது அக்பரூதின் ஓய்வு பெற்றதை அடுத்து, சென்னையை சேர்ந்த IAS அதிகாரி டி.எஸ்.திருமூர்த்தி அந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் 2016-ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்கான நிரந்தர தூதராக பணியில் இருந்து வந்த சயது அக்பரூதின் ஓய்வு பெற்றார். அவர் ஐ.நாவில் பல்வேறு முக்கிய விவாதம் மற்றும் பிரச்சினைகளில் இந்தியாவின் நிலைப்பாட்டை பலமாக எடுத்துரைத்தார்.0
அதிலும் முக்கியாமாக பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமதை சேர்ந்த மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐநா அறிவிபதற்கு இந்தியா சார்பில் எடுக்கப்பட்ட முயற்சியில் அக்பரூதின் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அக்பரூதின் ஓய்வு பெற்றதால், அந்த பதவிக்கு சென்னையை சேர்ந்த IAS அதிகாரி டி.எஸ்.திருமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 1985ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பேட்ஜில் பயிற்சி பெற்றுள்ளார். கடைசியாக வெளியுறவுத்துறையில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.