13 பேருடன் காணாமல் போன விமானம்!விமானம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம்-விமானப்படை அறிவிப்பு

காணாமல் போன ஏ.என்-32 ரக விமானம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று இந்திய விமானப்படை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் 3 ஆம் தேதி அசாம் மாநிலத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்திற்கு இந்திய விமானப்படை விமானமான ஏ.என். 32 ரக விமானம் புறப்பட்டது.இந்த விமானத்தில் 8 விமானிகள் மற்றும் 5 பயணிகளுடன் சென்றனர்.பின் அருணாச்சல் பிரதேச வான்பகுதியில் காணாமல் போனது.
காணாமல்போன இந்திய விமானப்படையின் ஏ.என் -32 விமானத்தை தேடும் பணி 6 -வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது .ஆனால் விமானம் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் 13 பேருடன் காணாமல் போன ஏ.என்-32 ரக விமானம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று இந்திய விமானப்படை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் விமானம் குறித்த தகவல் தெரிந்தவர்கள் 0378-3222164, 9436499477, 9402132477, 9402077267 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்கலாம் என்று இந்திய விமானப்படை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025