13 பேருடன் காணாமல் போன விமானம்!விமானம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம்-விமானப்படை அறிவிப்பு

Default Image

காணாமல் போன ஏ.என்-32 ரக விமானம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று இந்திய விமானப்படை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் 3 ஆம் தேதி அசாம் மாநிலத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்திற்கு  இந்திய விமானப்படை விமானமான ஏ.என். 32 ரக விமானம் புறப்பட்டது.இந்த விமானத்தில் 8 விமானிகள் மற்றும் 5  பயணிகளுடன் சென்றனர்.பின் அருணாச்சல் பிரதேச வான்பகுதியில் காணாமல் போனது.
காணாமல்போன இந்திய விமானப்படையின் ஏ.என் -32 விமானத்தை தேடும் பணி 6 -வது நாளாக  தீவிரமாக நடைபெற்று வருகிறது .ஆனால் விமானம் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் 13 பேருடன் காணாமல் போன ஏ.என்-32 ரக விமானம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று இந்திய விமானப்படை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் விமானம் குறித்த தகவல் தெரிந்தவர்கள்  0378-3222164, 9436499477, 9402132477, 9402077267 ஆகிய  எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவலை  தெரிவிக்கலாம் என்று இந்திய  விமானப்படை  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்