யாருக்கும் அஞ்சவும் மாட்டேன், தலை வணங்கவும் மாட்டேன் – ராகுல் காந்தி!

Published by
Rebekal

யாருக்கும் அஞ்சவும் மாட்டேன், தலை வணங்கவும் மாட்டேன் என  ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ரஸ் எனும் பகுதியில் 19 வயதான பெண் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை உயர்சாதியினை சேர்ந்த நான்கு ஆண்கள் கொடூரமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணின் முதுகெலும்புகள் உடைந்த நிலையில், அவரது நாக்கு அறுபட்டு இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 14 நாட்களாக உயிருக்கு போராடிய அந்த பெண் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் வலுத்து வந்தது. இந்த சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் தங்களது அமைச்சர்களுடன் சேர்ந்து சென்றுள்ளனர்.

இவர்கள் அங்கு சென்று பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற சென்றுள்ளனர். இருப்பினும் தடையை மீறி மாநிலத்திற்கு நுழைவதாக கூறி அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதுடன்  ராகுல் காந்தியை கீழே தள்ளி விட்டதாகவும் லத்தியால் அடித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரையும் அவர்களுடன் சென்ற எம்பிக்கள் மீதும் எப்ஐஆர் பதிவு செய்து கௌதம் புத்த நகரின் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, நான் இந்த உலகில் யாருக்கும் அஞ்ச மாட்டேன் அது போல அநீதிக்கு தலைவணங்கவும் மாட்டேன். என்னுடைய உண்மையை வைத்து பொய்யை வெல்வேன். இதனால் எல்லா துன்பங்களையும் என்னால் தாங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் இன்றைய காந்தி ஜெயந்திக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,

Published by
Rebekal

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

13 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

15 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

15 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago