‘இனிமே வீட்டுக்கு வரமாட்டேன், குட்பை’ – தடை செய்யப்பட்ட பப்ஜி கேமால் பறிபோன 10 லட்சம்…!

Published by
லீனா

தடைசெய்யப்பட்ட பப்ஜி  கேமை விளையாட, தாயாரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.10 லட்சத்தை பயன்படுத்திய சிறுவன். 

இளைஞர்களை எந்த எல்லைக்கும் செல்ல வைக்கும் ஆன்லைன் கேமிங் அடிமைத்தனத்தின் மற்றொரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பப்ஜி ஆன்லைன் கேமானது தடை செய்யப்பட்டிருந்தாலும், இன்றும் சிலர் சட்டவிரோதமாக விளையாடிக் கொண்டுதான் இருக்கின்றனர். அந்த வகையில் இந்த விளையாட்டால் பலர் பணத்தை இழந்தாலும், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் தனது வீட்டிற்கு தெரியாமல் பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளார். இந்த கேம் விளையாட தேவையான ஐடியை உருவாக்க, அச்சிறுவன் அவரது தாயாரின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி வந்துள்ளார். பெற்றோர் சிறுவனை சரியாக கவனிக்காத நிலையில், அச்சிறுவன் எப்போதுமே பப்ஜி விளையாடுவதிலேயே கவனமாக இருந்துள்ளார்.

இந்நிலையில், ஒரு கட்டத்தில் அவரது தாயார் தனது வங்கி கணக்கில் இருந்து 10 லட்சம் ரூபாய் காணாமல் போயுள்ளதை அறிந்து கொண்டார். இதுகுறித்து, என்னவென்று விசாரித்த போது அவரது மகன் அவருக்கு தெரியாமல் 10 லட்சத்தை விளையாட்டில் பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, சிறுவனை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த சிறுவன், ‘இனிமேல் நான் வீட்டுக்கு வரமாட்டேன், குட்பை’ என கடிதம் எழுத்துவைத்துவிட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். கடிதத்தை பார்த்த பெற்றோர் இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையிலான குழு சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டது. சிசிடிவி காட்சிகள் மற்றும் அச்சிறுவனின் தொலைபேசி எண்ணை வைத்து, 24 மணி நேரத்தில் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அதன்பின், போலீசார் சிறுவனுக்கு ஆலோசனை கொடுத்து, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

5 hours ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

6 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

7 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

9 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

9 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

10 hours ago