“நான் இனி அரசியல் ஆலோசகராக இருக்கப்போவதில்லை”- பிரசாந்த் கிஷோர் அதிரடி அறிவிப்பு!

Published by
Surya

தான் இனி அரசியல் ஆலோசகராக இருக்கப்போவதில்லை என்றும், தனது குடும்பத்துடன் நேரம் செலவழிக்க விரும்புவதாக பிரசாந்த் கிஷோர் தனியார் ஊடகத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. இந்த தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூக வவியூக வகுப்பாள்ர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான IPAC என்ற தேர்தல் வியூகங்கள் நிறுவனம் வகுத்துக் கொடுத்தது. மேலும், தமிழகத்தில் திமுக கட்சிக்கும் அந்நிறுவனம் வகுத்துக் கொடுத்தது.

இந்தநிலையில், நான் இனி அரசியல் ஆலோசகராக இருக்கப்போவதில்லை. ஐபேக் நிறுவனத்தை என் ஊழியர்கள் நடத்துவார்கள். நான் என் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க விரும்புகிறேன் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிரசாந்த் கிஷோர் கூறினார். மேலும், நாங்கள் எதிர்பார்த்த அளவை விட அதிக சீட்டுகளை திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக காட்சிகள் வெற்றி பெறும் சூழலில் உள்ளது, மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார். பிரசாந்த் கிஷோர், கடந்த சில மாதங்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சிறப்பான வெற்றியைப் பெற்றுவிட்டால், நான் ட்விட்டரிலிருந்து விலகிவிடுகிறேன்’ தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

Published by
Surya

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

10 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago