உ.பி அரசைப்போல் பஞ்சாப், ராஜஸ்தான் அரசுகள் செய்தால் நீதி கிடைக்கப் போராடுவேன் -ராகுல் பதிலடி

Published by
Venu

உத்தரப்பிரதேச அரசைப் போல் அல்லாமல் , பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அரசுகள் பாலியல் பலாத்காரம் நடக்கவில்லை என்று மறுக்கவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில்  19 வயது இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அங்கு சென்று அந்தக் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.முதலில் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி செல்ல அனுமதி மறுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.பின்னர் தான் ராகுல் ,பிரியங்கா உள்ளிட்ட 5 பேருக்கு உத்தரப் பிரதேச அரசு அனுமதி அளித்தது.

நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பஞ்சாப் மாநிலம், ஹோஷியாப்பூரில் 6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து ராகுல் காந்தியிடம் இருந்து ஒரு வார்த்தை இல்லை, ஒரு ட்வீட்  இல்லை.ஹத்ராஸ் விவகாரத்தில்  ஓடி ஓடி சென்ற ராகுல் காந்தி,பிரியங்கா காந்தியின் மனசாட்சியை இந்த கொடூரம் கொஞ்சம் கூட அசைத்து பார்க்க வில்லை.காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பாலியல் சம்பவம் நடைபெற்றால் ராகுல்காந்தி ஏன் அங்கு செல்வதில்லை? என்று கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் ராகுலிடம் எந்த கோபமும் இல்லை. எந்த வகையிலும் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அரசியலாக்கப்படக் கூடாது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நிர்மலா சீதாராமனின் கேள்விக்கு பதில் தெரிவிக்கும் வகையில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், “உத்தரப்பிரதேச அரசைப் போல் அல்லாமல் , பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அரசுகள் பாலியல் பலாத்காரம் நடக்கவில்லை என்று மறுக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை மிரட்டவும் ,அவர்கள் குடும்பம் நீதி பெறுவதையும் தடுக்கவில்லை .உத்தரப்பிரதேச அரசு செய்ததைப் போல பஞ்சாப், ராஜஸ்தான் அரசுகள் செய்தால், நான் அந்த மாநிலங்களுக்குச் செல்வேன், நீதி கிடைக்கப் போராடுவேன் ” என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இலங்கை தேர்தல்! மும்முனை போட்டியில் வெல்லப்போவது யார்?

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இலங்கை தேர்தல்! மும்முனை போட்டியில் வெல்லப்போவது யார்?

இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…

3 mins ago

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

25 mins ago

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

1 hour ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

1 hour ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

1 hour ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

2 hours ago