Categories: இந்தியா

‘சாதிக்கு எதிராக போராடுவேன்’ என் குழந்தையை போராளியாக்குவேன்..!!கணவனை இழந்த அம்ருதா.

Published by
Dinasuvadu desk

‘சாதிக்கு எதிராக போராடுவேன்’ என் குழந்தையை போராளியாக்குவேன் – அம்ருதா உருக்கம்!

‘சாதிப் பாகுபாடு இல்லாமல் குழந்தையை வளர்க்க வேண்டும் என்பதே எங்களின் கனவாக இருந்தது’ என தெலங்கானாவில் ஆணவக் கொலையினால் கணவனை இழந்த அம்ருதா தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், மிர்யலாகுடா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார். அதே பகுதியைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தார். பிரனய் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அம்ருதாவின் தந்தை மாருதிராவ் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சூழலில் அம்ருதா கர்ப்பமடைய தம்பதிகள் இருவரும் மருத்துவப் பரிசோதனைக்காகக் கடந்த 14-ம் தேதி மதியம் மருத்துவமனைக்கு வந்தபோது மருத்துவமனை வாசலிலேயே பிரனயை கூலிப்படையினர் வெட்டிச் சாய்த்தனர். இந்த ஆணவக் கொலை பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட அம்ருதாவின் தந்தை மாருதிராவ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவரைத்தொடர்ந்து, “பிரனய் இறந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் அம்ருதா வெளிவரவில்லை. அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது மருத்துவர்கள் அம்ருதாவை ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். அவர் சாப்பிடவும் மறுத்து வருகிறார். நான் தான் அவ்வப்போது சிறிது உணவு வழங்கி வருகிறேன்” என பிரனயின் தந்தை தெரிவித்துள்ளார். மேலும் அம்ருதாவைப் பார்க்க வருபவர்களிடம் அவருக்குச் சிறிது ஓய்வளிக்கும் படியும் கூறி வருகிறார்.

பிரனயின் வீட்டுக்குத் தொடர்ந்து பல சமூக ஆர்வலர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் இந்தத் தம்பதிக்கு நீதி கிடைக்க தாங்கள் உதவுவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும், அம்ருதாவும் தன் கணவர் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என ஒரு ஃபேஸ்புக் பக்கத்தை பகிர்ந்துள்ளார்.

DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

12 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

20 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 days ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 days ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 days ago