சரியாக வரி கட்டுபவர் என்ற முறையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இத்தனை ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இப்போது ஏன் மின்வெட்டு ஏற்படுகிறது என்பதற்கான காரணத்தை அறிய விரும்புகிறேன் என தோனியின் மனைவி ட்வீட்.
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் அதிகமான வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. இந்த கோடை காலங்களில் அனைவருமே, மின்வெட்டு ஏற்படக்கூடாது என்று தான் விரும்புவர். ஆனால், தற்போது நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களில் மின்வெட்டு தொடர்கிறது.
அந்த வகையில், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், பீகார், ஒரிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கனமழையின் காரணமாக நிலக்கரி தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 12 மாநிலங்களில் மின்சார தேவை அதிகரித்துள்ளதால் மின்வெட்டுப் பிரச்சினை நிலவுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் 5 மணி நேரமும், உத்தரப்பிரதேசம் பஞ்சாப் மாநிலங்களில் 8 மணி நேரம் மின்தடை நீடிப்பதாகவும், ஆந்திரா, மகாராஷ்டிரா,. ஜார்கண்ட், குஜராத் போன்ற மாநிலங்களில் இனிமேல் 12 மணி நேர மின்வெட்டு ஏற்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏற்படக்கூடிய மின்வெட்டு தொடர்பாக பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்ஷி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அதில் சரியாக வரி கட்டுபவர் என்ற முறையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இத்தனை ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இப்போது ஏன் மின்வெட்டு ஏற்படுகிறது என்பதற்கான காரணத்தை அறிய விரும்புகிறேன். நாங்கள் மின் சக்தியை சேமித்து வரும் பணியை, எங்கள் பங்கிற்கு சரியாகவே செய்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…