சரியாக வரி கட்டுபவர் என்ற முறையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இத்தனை ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இப்போது ஏன் மின்வெட்டு ஏற்படுகிறது என்பதற்கான காரணத்தை அறிய விரும்புகிறேன் என தோனியின் மனைவி ட்வீட்.
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் அதிகமான வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. இந்த கோடை காலங்களில் அனைவருமே, மின்வெட்டு ஏற்படக்கூடாது என்று தான் விரும்புவர். ஆனால், தற்போது நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களில் மின்வெட்டு தொடர்கிறது.
அந்த வகையில், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், பீகார், ஒரிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கனமழையின் காரணமாக நிலக்கரி தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 12 மாநிலங்களில் மின்சார தேவை அதிகரித்துள்ளதால் மின்வெட்டுப் பிரச்சினை நிலவுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் 5 மணி நேரமும், உத்தரப்பிரதேசம் பஞ்சாப் மாநிலங்களில் 8 மணி நேரம் மின்தடை நீடிப்பதாகவும், ஆந்திரா, மகாராஷ்டிரா,. ஜார்கண்ட், குஜராத் போன்ற மாநிலங்களில் இனிமேல் 12 மணி நேர மின்வெட்டு ஏற்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏற்படக்கூடிய மின்வெட்டு தொடர்பாக பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்ஷி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அதில் சரியாக வரி கட்டுபவர் என்ற முறையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இத்தனை ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இப்போது ஏன் மின்வெட்டு ஏற்படுகிறது என்பதற்கான காரணத்தை அறிய விரும்புகிறேன். நாங்கள் மின் சக்தியை சேமித்து வரும் பணியை, எங்கள் பங்கிற்கு சரியாகவே செய்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…