Categories: இந்தியா

ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை எதிர்ப்பதற்காகவே ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டேன்.! ராகுல்காந்தி பேச்சு.!

Published by
மணிகண்டன்

அண்மையில் தலைமை தேர்தல் ஆணையம்  அறிவித்த 5 மாநில தேர்தல்களில், மிசோராம் சட்டமன்ற தேர்தலும் ஒன்று. மிசோராமில் வரும் நவம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வெவ்வேறு தேதிகளில் நடைபெறும் தேர்தல்களின் முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக உள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் பிரதான கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை விறுவிறுப்பாக ஆரம்பித்துள்ளன. அதிலும் தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மாநிலந்தோறும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தையும் சேர்த்து மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய பிரதேசம் பெயரில் ஐபிஎல் அணி! மகளிருக்கு மாதம் ரூ.1,500 – காங்கிரஸ் வாக்குறுதி வெளியீடு!

மிசோராமில் 2 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அங்கு ஆளுநர் மாளிகை நோக்கி நடைபயண பேரணியில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, நான் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையில் நடைபயணம் மேற்கொண்டேன்.  அதன் மூலம் நாடு முழுவதும் இருந்த ஆர்எஸ்எஸ் – பாஜகவின் வெறுப்பு சித்தாந்தத்தை எதிர்த்து போராடினேன்.

ஒவ்வொரு மாநிலத்திற்கென்று தனித்துவமான பண்பாடு, பாரம்பரியம் மற்றும் மத நடைமுறைகள் உள்ளது . அந்த தனித்தனி  நடைமுறைகள் தான் இந்தியாவின் அடித்தளங்கள் ஆகும். மக்கள் தங்கள் மதத்தை பின்பற்றுவதற்கோ, மொழியைப் பேசுவதற்கோ அல்லது பாரம்பரியத்தைப் பின்பற்றுவதற்கோ பயப்படும் நிலை இருக்கவே கூடாது. அப்படி இருந்தால், அது நாம் விரும்பும் இந்தியா அல்ல.

இப்படியான செயல்களை தான் பாஜக சித்தாந்தம் செய்யும். இதற்கு சிறந்த உதாரணம் மணிப்பூர் கலவரம் தான். அனைத்து வகையான வன்முறைகளுக்கும் நாங்கள் (காங்கிரஸ்) எதிரானவர்கள். அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான வன்முறையை நாங்கள் மன்னிக்க மாட்டோம். வன்முறையை யார் செய்தாலும் எப்படி செய்தாலும் அது தவறு என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டு பேசினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

6 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

7 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

8 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

8 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

9 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

11 hours ago