டெல்லியை சிறப்பாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடியின் ஆசீர்வாதங்களைக் கேட்டுக் கொள்கிறேன். – அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லி நகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்று இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், டெல்லி மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக இருந்த பாஜகவின் உள்ளாட்சி ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுகளில் 134 இடங்களில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றது. பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 9 மற்றும் மற்றவை 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி மாநகராட்சி உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்ற பிறகு, டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், மாற்றத்தை கொண்டு வந்ததற்கு டெல்லி மக்களுக்கு நன்றி எனவும்,
டெல்லி மகாராட்சியை, ஊழலற்ற உள்ளாட்சியாக மாற்ற வேண்டிய கடமை உள்ளது என்று கூறிய அரவிந்த் கெஜ்ரிவால், மேலும், ‘ நான் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்து, டெல்லியை சிறப்பாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடியின் ஆசீர்வாதங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.’ எனவும் குறிப்பிட்டார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…