டெல்லியை சிறப்பாக மாற்ற பிரதமர் மோடியின் ஆசீர்வாதம் தேவை.! முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து.!

Default Image

டெல்லியை சிறப்பாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடியின் ஆசீர்வாதங்களைக் கேட்டுக் கொள்கிறேன். – அரவிந்த் கெஜ்ரிவால்.

டெல்லி நகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்று இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், டெல்லி மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக இருந்த  பாஜகவின் உள்ளாட்சி ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது.

டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுகளில் 134 இடங்களில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றது. பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 9 மற்றும் மற்றவை 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

டெல்லி மாநகராட்சி உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்ற பிறகு, டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், மாற்றத்தை கொண்டு வந்ததற்கு டெல்லி மக்களுக்கு நன்றி எனவும்,

டெல்லி மகாராட்சியை, ஊழலற்ற உள்ளாட்சியாக மாற்ற வேண்டிய கடமை உள்ளது என்று கூறிய அரவிந்த் கெஜ்ரிவால், மேலும், ‘ நான் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்து, டெல்லியை சிறப்பாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடியின் ஆசீர்வாதங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.’ எனவும் குறிப்பிட்டார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்