உலகின் சிறந்த மொபைல் போன் நிறுவனமான ஆப்பிள் ஐபோன் நிறுவனம், அதின் மொத்த உற்பத்தியான ஐந்து பங்கில் ஒரு பங்கு உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு பிறகு சீனாவில் உள்ள அனைத்து பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தை பிற நாடுகளுக்கு இடம்பெயர திட்டமிட்டு வருகின்றன. இந்நிலையில், சீனாவில் பெரிய அளவில் ஐபோன் உற்பத்தி செய்து வரும் ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் அவற்றை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியாவில் உள்ள நிறுவனங்களுடன் ஆப்பிள் நிறுவனம் ஏற்கெனவே ஒப்பந்த அடிப்படையில் ஐபோன்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில், சீனாவில் இருந்து பெரிய அளவில் உற்பத்தியை இடம் மாற்ற முடிவு செய்துள்ளது. இது குறித்து தொடர்ந்து பல பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இதேபோல், ஏற்கெனவே இந்தியாவில் உற்பத்தி செய்வது தொடர்பாக பாக்ஸ்கான், விஸ்ட்ரான் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள ஆப்பிள் நிறுவனம், அதே நிறுவனங்களுடன் கூடுதல் உற்பத்திக்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் 5 ஆண்டுகளில் சுமார் 4,000 கோடி டாலர் அதாவது சுமார் ₹3,04,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஐபோன்களை இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…