Congress MP Rahul Gandhi [Image source : ANI]
டெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மக்களவையில் சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. இதில் NDA கூட்டணி வேட்பாளர் பாஜக எம்பி ஓம் பிர்லா குரல் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்ற சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அவையில் பேசிய ராகுல் காந்தி, மக்களவையில் மக்களின் குரலை எதிர்க்கட்சிகள் எழுப்ப அனுமதிக்கப்படுவார்கள் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
மேலும், எதிர்க்கட்சிகளை அவையில் பேச அனுமதிப்பதன் மூலம், இந்திய மக்களின் குரலை பிரதிநிதித்துவப்படுத்தவார்கள் என்றும் இதன் மூலம், இந்திய அரசியலமைப்பை பாதுகாக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இதனை செய்வதன் மூலம் நீங்கள் (சபாநாயகர் அப்பாவு) உங்கள் கடமையை சரியாக செய்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, உங்களையும் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினர்களையும் மீண்டும் ஒருமுறை இந்தியா கூட்டணி சார்பாகவும் நான் வாழ்த்துகிறேன் என ராகுல் காந்தி மக்களவையில் தெரிவித்தார்.
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…