இன்று கங்குலி சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவு பெரும் விவாதத்தை கிளப்பியது அவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவது முதல் அரசியலில் இணையப்போவதாக பல விவாதங்களை கிளப்பியது.
இந்நிலையில் அந்த பதிவுக்கான ரகசியத்தை தற்பொழுது கங்குலி உடைத்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது “இது ஒரு உலகளாவிய கல்வி செயலி (அது) நான் ஆன்லைனில் அறிமுகப்படுத்தியுள்ளேன்” என்று கங்குலி சற்று முன்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
unknown nodeமுன்னதாக, கங்குலி சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில்
1992ல் கிரிக்கெட்டுடனான எனது பயணம் தொடங்கி 2022 30வது ஆண்டை நிறைவு செய்கிறது. அதன்பிறகு, கிரிக்கெட் எனக்கு நிறைய கொடுத்துள்ளது. மிக முக்கியமாக, இது உங்கள் அனைவரின் ஆதரவையும் எனக்கு அளித்துள்ளது.
பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த, எனக்கு ஆதரவளித்த மற்றும் நான் இன்று இருக்கும் இடத்தை அடைய உதவிய ஒவ்வொரு நபருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.
இன்று, நான் பலருக்கு உதவக்கூடிய ஒன்றைத் தொடங்க திட்டமிட்டுள்ளேன். என் வாழ்க்கையின் இந்த அத்தியாயத்தில் நான் நுழையும்போது உங்கள் ஆதரவைத் தொடரும் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.