எனக்கு BMW கார் வேண்டாம்! ஜகக்குவார் கார் தான் வேணும்! காரை ஆற்றில் விட்ட பணக்கார இளைஞர்!

Default Image

ஹரியானா, யமுனா நகரை சேர்ந்த பணக்கார இளைஞர் ஒருவர், தனது பெற்றோரிடம் ஜகக்குவார் கார் அங்கி கேட்டுள்ளார். ஆனால் அவரது பெற்றோர் அவருக்கு BMW காரினை வாங்கி கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, ஆத்திரமடைந்த அந்த இளைஞர் காரை ஒட்டி சென்று, ஆற்றில் விட்டுள்ளார். மேலும், இது விபத்தாக இல்லை என்றும், தனக்கு கார் பிடிக்காததால், இவ்வாறு செய்ததாகவும் கூறி அதனை வீடியோ எடுத்துள்ளார்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், காரில் இருந்த அந்த இளைஞரையும், காரையும் மீட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்