நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் இல்லை-டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை தாக்கிய சுரேஷ் பேட்டி

Default Image

நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் இல்லை என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கிய சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. 5- கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.அரவிந்த் கெஜ்ரிவால் சென்ற வாகனம் திறந்த வாகனம் ஆகும்.அப்போது பிரசார கூட்டத்தில் இருந்த ஒருவர் திறந்த வாகனத்தின் மீது ஏறி கெஜ்ரிவாலை கன்னத்தில் அறைந்தார்.இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் அந்த நபரை காவல்த்துறை கைது செய்தது.மேலும் அவரை விசாரணையும் செய்தது.

இதன் பின் கெஜ்ரிவாலை தாக்கிய சுரேஷ்  தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறுகையில்,இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் இல்லை. என்னை யாரும் தூண்டிவிடவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்