காங்கிரஸ் பெற்றிருக்கும் வாக்குகள் மிக மோசமானது என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை- ஏ.கே.ஆண்டனி

Default Image

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. அந்த கட்சி தனியாக இந்தியாவில் மொத்தம் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி அடைந்துள்ளது.

இதனால் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இதன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.ஆண்டனி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில், மக்களவை தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் பெற்றிருக்கும் வாக்குகள் மிக மோசமானது என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு செயல்படாதது குறித்து ஆராயப்படும் என்று ஏ.கே.ஆண்டனி  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்