நான் தினமும் கோமியம் குடிப்பதால் தான் எனக்கு கொரோனா வரவில்லை – போபால் பாஜக எம்பி பிரக்யா சிங்!

Published by
Rebekal

நான் தினமும் கோமியம் குடிக்கிறேன், அதனால் தான் எனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லையென போபால் தொகுதி பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்குர் அவர்கள் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டு தான்  இருக்கின்றனர். கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுவதுடன், முகக்கவசம் அணிந்து சமூக விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இருப்பினும் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தங்கள் வீடுகளிலேயே இயற்கையான பல மருந்துகளை உட்கொண்டு வருகின்றனர். அதில் ஒன்றாக பலர் மாட்டு சிறுநீர் அதாவது கோமியத்தை குடிப்பதாலும் மாட்டு சாணத்தை உடலில் பூசிக் கொள்வதாலும் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என நம்புகின்றனர். ஆனால் இது வதந்தி எனவும், இது போன்ற காரியங்களில் ஈடுபடுவதால் உடலுக்கு வேறு பல நோய்கள் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். இருப்பினும் சிலர் மாட்டு கோமியம் குடிப்பது கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் என நம்பி தான் வருகின்றனர்.

போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போபால் தொகுதி பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்குர் அவர்கள் நான் பசுவின் சிறுநீரை தினமும் குடிக்கிறேன்,  அதனால் எந்த மருந்தையும் எடுத்துக் கொள்வதில்லை. எனவே தான் எனக்கு தற்பொழுது வரை கொரோனா தொற்று ஏற்படவில்லை எனக் கூறியுள்ளார். மேலும் அனைத்து மக்களும் நாட்டு மாடுகளை வைத்திருக்க வேண்டும் எனவும், அனைவரும் அரசமரம், ஆலமரம், துளசி உள்ளிட்டவைகளையும் வீட்டில் நட்டு வளர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் உங்களுக்கு அதிகப்படியான மரம் நட்டு வளர்க்கும் பொழுது ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்காது எனவும் இந்த முறை போபாலில் ஒரு கோடி மரங்கள் நடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

9 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

10 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

10 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

11 hours ago

MIv s LSG: ரிக்கல்டன் – சூர்யகுமாரின் வெறித்தனமான ஆட்டம்.., மிரண்டு போன லக்னோவுக்கு பெரிய இலக்கு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

11 hours ago

“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!

ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…

12 hours ago