நான் தினமும் கோமியம் குடிப்பதால் தான் எனக்கு கொரோனா வரவில்லை – போபால் பாஜக எம்பி பிரக்யா சிங்!

Published by
Rebekal

நான் தினமும் கோமியம் குடிக்கிறேன், அதனால் தான் எனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லையென போபால் தொகுதி பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்குர் அவர்கள் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டு தான்  இருக்கின்றனர். கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுவதுடன், முகக்கவசம் அணிந்து சமூக விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இருப்பினும் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தங்கள் வீடுகளிலேயே இயற்கையான பல மருந்துகளை உட்கொண்டு வருகின்றனர். அதில் ஒன்றாக பலர் மாட்டு சிறுநீர் அதாவது கோமியத்தை குடிப்பதாலும் மாட்டு சாணத்தை உடலில் பூசிக் கொள்வதாலும் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என நம்புகின்றனர். ஆனால் இது வதந்தி எனவும், இது போன்ற காரியங்களில் ஈடுபடுவதால் உடலுக்கு வேறு பல நோய்கள் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். இருப்பினும் சிலர் மாட்டு கோமியம் குடிப்பது கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் என நம்பி தான் வருகின்றனர்.

போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போபால் தொகுதி பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்குர் அவர்கள் நான் பசுவின் சிறுநீரை தினமும் குடிக்கிறேன்,  அதனால் எந்த மருந்தையும் எடுத்துக் கொள்வதில்லை. எனவே தான் எனக்கு தற்பொழுது வரை கொரோனா தொற்று ஏற்படவில்லை எனக் கூறியுள்ளார். மேலும் அனைத்து மக்களும் நாட்டு மாடுகளை வைத்திருக்க வேண்டும் எனவும், அனைவரும் அரசமரம், ஆலமரம், துளசி உள்ளிட்டவைகளையும் வீட்டில் நட்டு வளர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் உங்களுக்கு அதிகப்படியான மரம் நட்டு வளர்க்கும் பொழுது ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்காது எனவும் இந்த முறை போபாலில் ஒரு கோடி மரங்கள் நடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

3 hours ago