“இவரின் மறைவால் வேதனைஅடைகிறேன்” – பிரதமர் மோடி இரங்கல்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் முதல் இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவரும்,முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளருமான நாகசாமி அவர்கள் உயிரிழந்துள்ள நிலையில்,அவரது மறைவு தனக்கு வேதனையளிப்பதாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் முதல் இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவரும்,முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளருமான நாகசாமி அவர்கள்,உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார்.இதனைத் தொடர்ந்து,அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில்,தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தை பிரபலப்படுத்துவதில் நாகசுவாமியின் முன்மாதிரியான பங்களிப்பை வரும் தலைமுறையினர் மறக்க மாட்டார்கள் எனவும்,அவரது மறைவால் தான் வேதனை அடைவதாகவும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தமிழில் கூறியுள்ளதாவது:
“தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தை பிரபலப்படுத்துவதில் திரு.ஆர்.நாகசுவாமியின் முன்மாதிரியான பங்களிப்பை வரும் தலைமுறையினர் மறக்க மாட்டார்கள்.வரலாறு & தொல்லியல் மீதான அவரது ஆர்வம் குறிப்பிடத்தக்கது.அவரது மறைவால் வேதனை அடைகிறேன்.அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள்.ஓம் சாந்தி”,என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள். ஓம் சாந்தி.
— Narendra Modi (@narendramodi) January 23, 2022
நாகசாமி அவர்கள் கடந்த 1959 ஆம் ஆண்டு முதல் 1963-ஆம் ஆண்டு வரை சென்னை அரசு அருங்காட்சியகத்தின் பாதுகாவலராகவும்,அதன்பின்னர்,1963-ஆம் ஆண்டு முதல் 1965-ஆம் ஆண்டு வரை தமிழக அரசு தொல்லியல் துறையின் உதவி சிறப்பு அதிகாரியாகவும்,மேலும்,1966-ஆம் ஆண்டு முதல் 1988-ஆம் ஆண்டு வரை தொல்லியல் துறையின் முதலாவது இயக்குநராகவும் இருந்தவர்.
கல்வெட்டு,கலை,இசை, நாட்டியம், தமிழ் வரலாறு உள்ளிட்டவை குறித்து தமிழ், ஆங்கிலம்,சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பல நூல்களையும் எழுதியவர். அதுமட்டுமல்லாமல்,நாகசாமி அவர்கள் தொல்லியல் மற்றும் கல்வெட்டு எழுத்து குறிப்பு அறிஞராக இருந்தவர்.இதன்காரணமாக,நாகசாமியின் பணிகளை பாராட்டி,அவருக்கு மத்திய அரசு, 2018-ல் பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)