பிரதமர் மோடியை கொல்ல போவதாக கொலை மிரட்டல் விடுத்த 22 வயது இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 11 மணியளவில் இளைஞரொருவர் அழைப்பு விடுத்து, பிரதமர் மோடியை கொல்ல போகிறேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். பின் சற்று நேரத்தில் தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார். இதனையடுத்து இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அந்த மிரட்டல் விடுத்த 22 வயது இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 11 மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் பிரதமர் மோடியை கொல்ல போகிறேன் என்று மிரட்டல் விடுத்து பின் இணைப்பை துண்டித்தார். இதனை எடுத்து, அவரது தொலைபேசி என்னை வைத்து, வட கிழக்கு டெல்லியில் உள்ள கஜூரி காஸ் பகுதியில் இருந்து அந்த நபர் பேசியது தெரியவந்தது. அந்த நபர் சல்மான் என்ற அர்மான் என்ற 22 வயது இளைஞர் ஆவார்.
இதனையடுத்து, தனிப்படை போலீசார் தொலைபேசியில் பேசி நபரின் வீட்டுக்கு சென்று அவரை பிடித்தனர். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு கொலை குற்றத்திற்காக சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் தண்டனை பெற்றுள்ளார்.
சல்மான் போதை பழக்கத்துக்கு அடிமையானவர். தொலைபேசியில் பேசுவதற்கு முன் அவருக்கும் அவரது தந்தைக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து போதை மருந்து சாப்பிட்ட பின் தனது தந்தையுடன் தகராறு செய்துவிட்டு, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்து பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
தொடர்ந்து மாநிலம் போலீசார் விசாரணை நடத்தியதில், தான் வெளியில் இருக்க விரும்பவில்லை. சிறைக்கு செல்ல விரும்புகிறேன். அதனால் தான் இவ்வாறு பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்தேன் என்று தெரிவித்துள்ளார். இதனை எதிர்த்து தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் விரைவில் உளவுப் பிரிவு போலீசாரிடம் அவர் ஒப்படைக்கப்படுவார் என்று தெரிவித்தனர்.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…