‘பிரதமர் மோடியை கொல்ல போகிறேன்’- கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது..! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள்..!

Published by
லீனா

பிரதமர் மோடியை கொல்ல போவதாக கொலை மிரட்டல் விடுத்த 22 வயது இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 11 மணியளவில் இளைஞரொருவர் அழைப்பு விடுத்து, பிரதமர் மோடியை கொல்ல போகிறேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். பின் சற்று நேரத்தில் தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார். இதனையடுத்து இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அந்த மிரட்டல் விடுத்த 22 வயது இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 11 மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் பிரதமர் மோடியை கொல்ல போகிறேன் என்று மிரட்டல் விடுத்து பின் இணைப்பை துண்டித்தார். இதனை எடுத்து, அவரது தொலைபேசி என்னை வைத்து, வட கிழக்கு டெல்லியில் உள்ள கஜூரி காஸ் பகுதியில் இருந்து அந்த நபர் பேசியது தெரியவந்தது.  அந்த நபர் சல்மான் என்ற அர்மான் என்ற 22 வயது இளைஞர் ஆவார்.

இதனையடுத்து, தனிப்படை போலீசார் தொலைபேசியில் பேசி நபரின் வீட்டுக்கு சென்று அவரை பிடித்தனர்.  இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு கொலை குற்றத்திற்காக சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் தண்டனை பெற்றுள்ளார்.

சல்மான் போதை பழக்கத்துக்கு அடிமையானவர். தொலைபேசியில் பேசுவதற்கு முன் அவருக்கும் அவரது தந்தைக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து போதை மருந்து சாப்பிட்ட பின் தனது தந்தையுடன் தகராறு செய்துவிட்டு, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்து பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

தொடர்ந்து மாநிலம் போலீசார் விசாரணை நடத்தியதில், தான் வெளியில் இருக்க விரும்பவில்லை. சிறைக்கு செல்ல விரும்புகிறேன். அதனால் தான் இவ்வாறு பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்தேன் என்று தெரிவித்துள்ளார். இதனை எதிர்த்து தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் விரைவில் உளவுப் பிரிவு போலீசாரிடம் அவர் ஒப்படைக்கப்படுவார் என்று தெரிவித்தனர்.

Published by
லீனா

Recent Posts

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…

12 hours ago

ஜானி மாஸ்டர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு.! விரைவில் கைது?

ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…

12 hours ago

அனல் பறக்கும் பிரியங்கா பிரச்சனை…மணிமேகலை போட்ட கெத்து பதிவு?

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே  நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…

13 hours ago

தனுஷ் விவகாரம்: ஃபெப்சி செயலுக்கு நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம்.!

சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…

13 hours ago

‘பத்து நிமிஷத்துல பஞ்சு போன்ற அப்பம்’: ட்ரை பண்ணி பாருங்க!

சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…

13 hours ago

ஐபிஎல் 2025 : “பஞ்சாப் அணிக்கு அடித்த ஜாக்பாட்”! பயிற்சியாளராக இணைந்தார் ரிக்கி பாண்டிங்!

சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…

13 hours ago