ஐதராபாத் : ஹைதராபாத் – பெங்களூரு நெடுஞ்சாலையில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி சென்றமாதம் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரும் விசாரணையின்போது தப்பிக்க முயன்றதால் சுட்டு கொல்லப்பட்டனர்.
அந்த வடு ஆறுவதற்குள் அடுத்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹைதராபாத்தில் ஒரு 18 வயது இளம்பெண்ணும் அந்த பெண்ணின் 10 வயது தங்கையும் தங்கள் பாட்டி வீட்டிற்கு செல்ல வந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு ஹைதராபாத்தில் வழி தெரியவில்லை. இதனை பயன்படுத்தி கொண்ட ஆட்டோ டிரைவர்கள் அன்வர் மற்றும் பெரோஸ் ஆகியோர் அந்த இளம் பெண்ணையும் அவரது தங்கையையும் அழைத்துக்கொண்டு ஒரு லாட்ஜிற்கு வலுக்கட்டாயமாக இழுத்து சென்று தங்கை கண்முன்னே 18 வயது இளம்பெண்ணை இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதற்கிடையில் அந்த இளம் பெண்ணையும் 10 வயது சிறுமியையும் காணவில்லை என பெற்றோர்கள் தேடி வந்துள்ளனர். பின்னர் வன்கொடுமை செய்யப்பட்ட அந்த பெண் தனது தங்கையுடன் தப்பித்து சென்று பெற்றோர்களுக்கு போன் செய்து தான் இருக்கும் இடத்தை கூறி பெற்றோரிடம் சென்றுள்ளனர். அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆட்டோ டிரைவர்கள் அன்வர், பெரோஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது போலீஸ் விசாரணையில் உள்ளனர்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…