ஐதராபாத் : ஹைதராபாத் – பெங்களூரு நெடுஞ்சாலையில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி சென்றமாதம் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரும் விசாரணையின்போது தப்பிக்க முயன்றதால் சுட்டு கொல்லப்பட்டனர்.
அந்த வடு ஆறுவதற்குள் அடுத்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹைதராபாத்தில் ஒரு 18 வயது இளம்பெண்ணும் அந்த பெண்ணின் 10 வயது தங்கையும் தங்கள் பாட்டி வீட்டிற்கு செல்ல வந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு ஹைதராபாத்தில் வழி தெரியவில்லை. இதனை பயன்படுத்தி கொண்ட ஆட்டோ டிரைவர்கள் அன்வர் மற்றும் பெரோஸ் ஆகியோர் அந்த இளம் பெண்ணையும் அவரது தங்கையையும் அழைத்துக்கொண்டு ஒரு லாட்ஜிற்கு வலுக்கட்டாயமாக இழுத்து சென்று தங்கை கண்முன்னே 18 வயது இளம்பெண்ணை இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதற்கிடையில் அந்த இளம் பெண்ணையும் 10 வயது சிறுமியையும் காணவில்லை என பெற்றோர்கள் தேடி வந்துள்ளனர். பின்னர் வன்கொடுமை செய்யப்பட்ட அந்த பெண் தனது தங்கையுடன் தப்பித்து சென்று பெற்றோர்களுக்கு போன் செய்து தான் இருக்கும் இடத்தை கூறி பெற்றோரிடம் சென்றுள்ளனர். அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆட்டோ டிரைவர்கள் அன்வர், பெரோஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது போலீஸ் விசாரணையில் உள்ளனர்.
சென்னை : தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பலரும்…
சென்னை : குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று நீலகிரி, ஈரோடு,…
வாஷிங்டன் : கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் விண்கலம் மூலம்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 9 பெட்டிகளில் சுமார்…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…