வரும் திங்கள் அன்று நாடு முழுவதும், ஆவனி மாதம் வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை கொண்டாட பக்தர்கள் தற்போதே ஆயத்தமாகி வருகின்றனர். பல்வேறு இடங்களில் இதற்கான பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் மும்பையில் விநாயகர் சதுர்த்தி வெகு கோலாகலமாக கொண்டாடப்படும். அங்கு லால்பாக்ஷா விநாயகர் மிகவும் பிரபலமானவர். அதேபோல ஹைதராபாத்தில் கைராபாத் விநாயகர் மிகவும் பிரபலமானவர். அங்கு செய்யப்படும் சிலை வருட வருடம் உயரம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இந்த வருடம் விநாயகர் சிலையின் உயரம் 61 அடியாகும். இந்த விநாயகர் சிலையை 12 தலைகள், 24 கைகள் உடன் ஏழு குதிரைகள் கொண்ட பிரமாண்டமாக தயாரித்துள்ளனர். இந்த விநாயகருக்கு சூரிய விநாயகர் என பெயரிட்டுள்ளனர். இச்சிலையை தயாரிக்க 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நான்கு மாதங்களாக ஈடுபட்டுள்ளனர். 50 டன் எடையுள்ள இந்த பிரம்மாண்ட விநாயகர் சிலை சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் விநாயகர் சதுர்த்தியன்று பொதுமக்கள் வழிபாட்டிற்கு கொண்டுவரவுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…