ஹைதராபாத்தில் பள்ளி பேருந்துக்காக காத்திருந்த மாணவர்கள் மேல் லாரி மோதியதில் 7 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
ஹைதராபாத்தில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள செவெல்லா என்ற இடத்தில் பள்ளி மாணவர்கள் பேருந்திற்காக காத்து கொண்டிருக்கும் பொழுது லாரி ஒன்று மாணவர்கள் மீது மோதியதில் ருத்விக் என்ற ஏழு வயது சிறுவன் உயிரிழந்ததோடு சிறுவனின் பாட்டி யாதம்மா காயமடைந்தார்.
ருத்விக் மற்றும் அவனது மூத்த சகோதரன் அபிலாஷ் இருவரும் தனது பாட்டியுடன் கிராமத்தில் வழக்கமாக பள்ளி பேருந்து நிற்கும் இடத்திற்கு வந்துள்ளனர். அங்கே பள்ளிப் பேருந்திற்காக மாணவர்கள் காத்துக் கொண்டிருக்கையில் சாலையில் மிகவேகமாக சென்று கொண்டிருந்த லாரி ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து மாணவர்கள் மீது மோதியது.
இந்த மோதலில் ருத்விக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.அவனது பாட்டி யாதம்மா பலமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த விபத்து பற்றி செவெல்லா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…