ஹைதராபாத் : பள்ளி மாணவர்கள் மீது லாரி மோதியதில் 7 வயது சிறுவன் உயிரிழப்பு.!

Default Image

ஹைதராபாத்தில் பள்ளி பேருந்துக்காக காத்திருந்த மாணவர்கள் மேல் லாரி மோதியதில் 7 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

ஹைதராபாத்தில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள செவெல்லா என்ற இடத்தில் பள்ளி மாணவர்கள் பேருந்திற்காக காத்து கொண்டிருக்கும் பொழுது லாரி ஒன்று மாணவர்கள் மீது மோதியதில் ருத்விக் என்ற ஏழு வயது சிறுவன் உயிரிழந்ததோடு சிறுவனின் பாட்டி யாதம்மா காயமடைந்தார்.

ருத்விக் மற்றும் அவனது மூத்த சகோதரன் அபிலாஷ் இருவரும் தனது பாட்டியுடன் கிராமத்தில் வழக்கமாக பள்ளி பேருந்து நிற்கும் இடத்திற்கு வந்துள்ளனர். அங்கே பள்ளிப் பேருந்திற்காக மாணவர்கள் காத்துக் கொண்டிருக்கையில் சாலையில் மிகவேகமாக சென்று கொண்டிருந்த லாரி ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து மாணவர்கள் மீது மோதியது.

இந்த மோதலில் ருத்விக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.அவனது பாட்டி யாதம்மா பலமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த விபத்து பற்றி செவெல்லா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்