கர்ப்பிணி மனைவியை டாய்லட் கிளீனரை கொடுக்குமாறு வற்புறுத்தி கொலை செய்த கணவன்..!

Published by
Rebekal

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்திலுள்ள கர்ப்பிணி பெண் ஒருவரை அவரது கணவர் கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை வற்புறுத்து குடிக்கச் சொல்லியதால் அப்பெண் கடந்த புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் மாவட்டம் ராஜ்பேட் பகுதியில் வசித்து வரக்கூடிய தருண் என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பதாக கல்யாணி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கல்யாணி கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து தருண் கல்யாணி அழகாக இல்லை என்று கூறி அவரை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், உங்கள் வீட்டில் இருந்து கூடுதல் வரதட்சினை வாங்கி வா என அடிக்கடி அவளை அடித்ததாகவும், இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை தருண் கல்யாணியை கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை குடிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

அதனை குடித்த கல்யாணி சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்உடல்நிலை , சிகிச்சை பலனின்றி அவர் புதன்கிழமை உயிரிழந்துள்ளார். பின் கல்யாணியின் உறவினர்கள் தருண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசார் தருண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இந்திய தண்டனை சட்டம் 302, 304b மற்றும் 498 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதுடன், தலைமறைவாக உள்ள தருணை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Recent Posts

ஆர்சிபி சிறந்த அணி தான் ஆனா நாங்க…வருண் சக்கரவர்த்தி ஃபயர் ஸ்பீச்!

ஆர்சிபி சிறந்த அணி தான் ஆனா நாங்க…வருண் சக்கரவர்த்தி ஃபயர் ஸ்பீச்!

கொல்கத்தா : 18 வது சீசனுக்கான  ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. …

57 minutes ago

பதவிக்காகவோ புகழ்ச்சிக்காகவோ அரசியலுக்கு வந்தவன் அல்ல நான் – இபிஎஸ் பேச்சு!

சென்னை : இன்று அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர்…

1 hour ago

குறுக்க இந்த மழை கௌசிக் வந்தா? அபாயத்தில் முதல் ஐபிஎல் போட்டி? ஆரஞ்சு அலர்ட்!

கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…

2 hours ago

ஊழலை மறைக்க மொழியின் பெயரால் அரசியல் செய்றாங்க! அமித் ஷா பேச்சு!

டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி  முதல் தொடங்கிய நிலையில், வரும்  ஏப்ரல் 6-ஆம் தேதி…

2 hours ago

ஐபிஎல் 2025 : சென்னை போட்டிக்கு டிக்கெட் வாங்குங்க…மெட்ரோவில் ஃபிரியா பயணம் பண்ணுங்க!

சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…

3 hours ago

இதுதான் அரசியல்., திமுக அழைப்பிற்கு பவன் கல்யாண் ஆதரவு! நாளை வருகை..,

சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…

4 hours ago