மனைவியை போட்டு தள்ள நண்பனுக்கு 5000 கொடுத்த கணவர், சிறையில் உயிரிழந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு பின் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள விஜாபூர் மேக் எனும் கிராமத்தில் வாழ்ந்து வந்த சுரேஷ் என்பவருக்கும் அவரது மனைவி குந்தாவுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டதால், சுரேஷுக்கு மனைவி மீது வெறுப்பு ஏற்பட்டு தனது மனைவியை போட்டு தள்ள முடிவு எடுத்துள்ளார். இதற்காக தனது நண்பர் சம்பூர் என்பவருக்கு 5,000 ரூபாய் பணம் கொடுத்து எவ்வாறு கொலை செய்ய வேண்டும் என சொல்லிக் கொடுத்துள்ளார். கடந்த 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், அவரும் குந்தவை வீட்டில் வைத்து கழுத்தை நெரித்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்துள்ளார்.
கொலைக்கு பிறகு இருவரும் தலைமறைவாகிய நிலையில், சிறிது காலத்திற்குப் பிறகு கணவர் சுரேஷ் மட்டும் போலீசில் பிடிபட்டு கடந்த சில வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில் அண்மையில் உடல் நலக்குறைவால் சிறையிலேயே உயிரிழந்துள்ளார். 20 வருடங்களுக்குப் பிறகு தலைமறைவாக இருந்த ஷாம்புவை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். இவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர். இடைப்பட்ட காலங்களில் வேறு ஏதேனும் குறைகள் குற்றங்கள் எதுவும் செய்துள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…