மனைவியை கடித்த நாயை சுட்டுக்கொன்ற பாசக்கார கணவர் கைது!

Published by
Rebekal
  • மத்திய பிரதேசத்தில் தனது மனைவியை கடித்து குதறிய நாயை துப்பாக்கி வைத்து சுட்டுக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்
  • அவரிடமிருந்த உரிமம் பெற்ற துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் எடுத்த சுதாமா எனும் நகரில் வசித்து வரக்கூடிய நரேந்திர விஷ்னோய் என்பவரின் மனைவியை அவரது அண்டை வீட்டுக்காரரான மருத்துவர் வினித் என்பவரது வளர்ப்பு நாய் கடித்துள்ளது. நாய் கடித்ததால் வலி தாங்காமல் விஷ்னோய் மனைவி அலறி துடித்து வீட்டிற்குள் வந்துள்ளார். அதைப் பார்த்து கோபமடைந்த அவரது பாசக்கார கணவர் விஷ்னோய் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று அப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த அந்த நாயை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.

கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் அந்த நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. இதனை அடுத்து துப்பாக்கி சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே வந்த நாயின் உரிமையாளர் வினித் தனது வளர்ப்பு நாயை சுட்டது அண்டை வீட்டுக்காரர் விஷ்னோய் தான் என்பதை அறிந்து அவர் மீது துவாரகாபுரி போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் நரேந்திர விஷ்னோய் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Published by
Rebekal

Recent Posts

#RRvCSK: தொடர் தோல்வியில் சென்னை… முதல் வெற்றியை ருசித்த ராஜஸ்தான்..!

#RRvCSK: தொடர் தோல்வியில் சென்னை… முதல் வெற்றியை ருசித்த ராஜஸ்தான்..!

இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு…

4 hours ago

#RRvCSK: மிரட்டி விட்ட நிதிஷ் ராணா…. 183 ரன்கள் இலக்கை எட்டுமா சென்னை..!

இன்றைய 2-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானதில் விளையாடி வருகிறது. இந்த…

7 hours ago

முடிச்சிவிட்டீங்க போங்க! ஹைதராபாத்தை ஓட விட்ட டெல்லி..7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விசாகப்பட்டினம் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், டெல்லி அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…

9 hours ago

தேடி சென்ற பிரித்வி ஷா! பார்த்துவிட்டு கண்டுகொள்ளாமல் சென்ற டெல்லி உரிமையாளர்கள்!

டெல்லி : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க என்ற கேள்வியை பிரித்வி ஷா பார்த்து நாம் கேட்கலாம். ஏனென்றால்,…

10 hours ago

SRHvsDC : அந்நியனாக மாறிய அனிகேத்..அதிரடி ஹைதராபாத்தை திணற வைத்த டெல்லி! டார்கெட் இது தான்!

விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மன்ஸ் நாங்கள் பேட்டிங் செய்கிறோம் என பேட்டிங்கை தேர்வு…

11 hours ago

இரண்டாவது இடத்திற்கு தான் விஜய்க்கு இபிஎஸ்க்கும் சண்டை! திருமாவளவன் பேச்சு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…

11 hours ago