இந்த உலகில் உதவும் மனப்பான்மை கொண்ட பல உள்ளங்கள் இருப்பதால் தான் இன்னும் உலகம் சுழன்று கொண்டு இருக்கிறது. பலரும் மனிதாபிமானம் இலலாமல் போயிற்றோ என்ற கேள்வி எழுப்பலாம். ஆனால், இந்த கேள்விக்கு பதிலாக இன்றும் பலர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், குஜராத் மாநிலம் கல்யாண்ப்பூர் கிராமத்தில், பிருத்விராஜ் ஜடேஜா என்ற காவலர் வெள்ளத்தில் தத்தளித்த இரு பெண் குழந்தைகளை தோளில் சுமந்தபடி தூக்கி சென்று கரை சேர்த்துள்ளார்.
இந்த காவலர், இடுப்பளவு தண்ணீரில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல், ஒன்றரை கிலோமீட்டர் தூரம், குழந்தைகளை தொழில் சுமந்தவாறு நடந்து வந்துள்ளார். இதுகுறித்து காவலர் ஜடேஜா அவர்கள் கூறுகையில், கல்யாண் சாலையில் 40 பேர் வெள்ளத்தில் சிக்கியிருப்பதாக தகவல் வந்தது.
இதனையடுத்து, எங்கள் குழுவினர் அங்கு உடனடியாக விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டோம். அங்கு வேறு எந்த யோசனையும் எழவில்லை. அனைவரும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்ததால் தான் குழந்தைகளை தோளில் தூக்கி வந்ததாக கூறியுள்ளார்.
இவரது இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிற நிலையில், இவரது இந்த செயலை பார்த்த பல அரசியல் பிரபலங்கள் மற்றும் திரைப்பலங்கள் என பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். மேலும், இது போன்ற காவலர்களுக்கு சம்பளத்தை அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…