சத்தீஸ்கரின் ஒரு மாவட்டத்தில் திரையரங்கு மீண்டும் திறக்க அனுமதி.!

Default Image

சத்தீஸ்கரில் மல்டிபிளெக்ஸ் மற்றும் திரையரங்குகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் 50 சதவீத இருக்கை வசதிகளுடன் மல்டிபிளெக்ஸ் மற்றும் திரையரங்குகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராய்ப்பூரில் வருகின்ற சனிக்கிழமை அதாவது தீபாவளி நாள் அல்லது ஞாயிற்றுக்கிழமைக்குள் புதிய படங்கள் திரையிட வாய்ப்பு இருக்கிறது என்று அம்மாவட்ட ஒரு திரையரங்க உரிமையாளர் தெரிவித்தார்.

ஒரு உத்தரவில், கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை சரிபார்க்க திரையரங்குகள் மற்றும் மல்டிபிளெக்ஸில் திரைப்படங்களைக் காண்பிப்பதற்கான ஒரு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது குறித்து ராய்ப்பூர் கலெக்டர் எஸ்.பாரதி தாசன் விவரித்துள்ளார்.

அவர் கூறுகையில், “திரையரங்குகள் மற்றும் மல்டிபிளெக்ஸில்  மொத்த இருக்கை 50% க்கும் அதிகமாக இருக்கக்கூடாது, மேலும் வளாகத்திற்குள் இருக்கை ஏற்பாடு செய்யப்பட வேண்டும், இது இரண்டு நபர்களிடையே குறைந்தது 6 அடி தூரத்திற்கு போதுமான இடைவெளி தூரத்தை பின்பற்றும் வகையில் இருக்க வேண்டும் என கூறினார்.

குறிப்பாக, கொரோனா சோதனை செய்து அறிகுறியற்ற நபர்கள் மட்டுமே வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட வேண்டும், மேலும் அவர் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியியை பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார்.

இதற்கிடையில், ராய்கர், ஜஞ்ச்கீர்-சம்பா மற்றும் பஸ்தார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சினிமா அரங்குகள் மற்றும் மல்டிபிளெக்ஸ்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டது.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
KKR VS LSG IPL 2025
Free bus for men - Minister Sivasankar says
Rajat Patidar fined
Governor RN Ravi - Supreme court of India - TN CM MK Stalin
AA22xA6