சிறப்பு ரயிலில் எத்தனை பேர் பயணிக்கலாம்.? புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இதோ.!

Published by
பாலா கலியமூர்த்தி

சிறப்பு ரயிலில் பயணம் செய்பவர்களுக்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால், தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, நேற்றுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு மே 17 ஆம் தேதி நீடிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் சிக்கி தவிக்கும் வெளிமாநில சேர்ந்தவர்கள் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைப்பதற்காக ரயில்வே நிர்வாகம் கடந்த 1ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கி வருகிறது. இதுதொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

  • ஒரு ரயிலில் சுமார் 1,200 பயணிகள் வரை பயணிக்கலாம் என்றும் 90% க்கும் குறையாத அளவுக்கு பயணிகளை ஏற்றி அனுப்பப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
  • சிறப்பு ரயில்கள் 500 கி.மீட்டருக்கும் அதிகமாக தூரத்துக்கு இயக்கப்படுவதால், இடையில் எந்த இடத்திலும் நிற்காமல் செல்லும்.
  • இதற்கான டிக்கெட்டுகளை ரயில்வே அச்சிட்டு மாநில அரசிடம் வழங்கும். அந்த டிக்கெட்டுகளை பயணம் செய்பவர்களிடம் மாநில அரசு கொடுத்து டிக்கெட் கட்டணத்தை வசூலித்து ரெயில்வேயிடம் வழங்க வேண்டும்.
  • பரிசோதனைக்கு செய்யப்பட்ட பின், பயணம் செய்வதற்கான டிக்கெட் வைத்திருப்பவர்களை மட்டுமே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்க வேண்டும்.
  • பயணிகளுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகியவற்றை அவர்களை அனுப்பி வைக்கும் மாநில அரசுகளே வழங்கவேண்டும்.
  • முக கவசம் அணிவதும், ஆரோக்கிய சேது செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்ய கேட்டுக்கொள்ள வேண்டும்.
  • பயண நேரம் 12 மணி நேரத்துக்கும் மேல் நீட்டித்தால் ரெயில்வே சார்பில் பயணிகளுக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படும்.
  • பயணிகள் குறிப்பிட்ட இடத்தை சென்று அடைந்ததும் அந்தந்த மாநில அரசு அதிகாரிகள் அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்து தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். பின்னர் அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களை அனுப்பிவைக்க வேண்டும்.
  • இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்பட்டால் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படும்.
Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“வரியை திரும்ப பெறுங்கள்., இல்லையென்றால்?” சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

“வரியை திரும்ப பெறுங்கள்., இல்லையென்றால்?” சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு அமெரிக்கா பொருட்களுக்கு  மற்ற…

13 minutes ago

நெல்லையில் இளைஞர் அடித்து கொலை செய்து புதைப்பு – 2 பேர் கைது!

திருநெல்வேலி : நெல்லையில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

51 minutes ago

LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!

சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…

1 hour ago

முடிச்சி விட்டிங்க போங்க.! அந்த சத்தம்… 138 dB… தோனியை முந்திய ‘கிங்’ கோலி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, வான்கடே மைதானத்தில் விராட் கோலி ஆல்…

2 hours ago

மேட்சை மாற்றிய மிரட்டலான கேட்ச்..! மிரள வைத்த சால்ட் – டிம் டேவிட்.., பெங்களூரு த்ரில் வெற்றி!

மும்பை :  ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி…

2 hours ago

வெற்றியின் பக்கம் திரும்புமா சென்னை அணி? தோனி இன்று என்ன செய்ய காத்திருக்காரோ!

சண்டிகர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்.08) மோதுகின்றது.…

3 hours ago