Categories: இந்தியா

இன்னும் எத்தனை நாட்கள் பிரதமர் மோடி இதனை பேச போகிறார்.? கார்கே காட்டம்.!

Published by
மணிகண்டன்

டெல்லி: 18வது மக்களவை கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இன்று துவங்கிப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஜூன் 25, 1975ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்பட்ட எமெர்ஜென்சி பற்றி குறிப்பிட்டு பேசினார்.

பிரதமர் மோடி கூறுகையில், நாளை (ஜூன் 25) இந்திய ஜனநாயகத்தின் மீது கறைபடிந்து 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் முற்றிலும் நிராகரிக்கப்பட்ட நாள் அது. அரசியலமைப்பின் ஒவ்வொரு பகுதியும் துண்டு துண்டாக்கப்பட்டது. இதனை இந்தியாவின் புதிய தலைமுறை ஒருபோதும் மறக்காது. நாடு சிறைச்சாலையாக மாற்றப்பட்ட நாள். ஜனநாயகம் முற்றிலுமாக நசுக்கப்பட்ட நாள் என்று எமர்ஜென்சியை கடுமையாக சாடினார்.

மேலும், 50 ஆண்டுகளுக்கு முன்பு செய்த இதுபோன்ற செயலை மீண்டும் இந்தியாவில் யாரும் செய்ய மாட்டோம் என நாம் தீர்மானம் எடுப்போம். துடிப்பான ஜனநாயகத்தை கொண்டுவர, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி சாமானிய மக்களின் கனவுகளை நிறைவேற்ற தீர்மானம் எடுப்போம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடி குறிப்பிட்ட எமர்ஜென்சி விமர்சனத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக எதிர்த்தார். இன்னும் எத்தனை காலம் எமர்ஜென்சி பற்றி ஆட்சி செய்ய போகிறார்  என கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்,  எமர்ஜென்சியை 100 தடவைக்கு மேல் சொல்லி இருப்பார். இதைப் பற்றிப் பேசி எவ்வளவு காலம் ஆட்சி செய்ய வேண்டும்? அரசியலமைப்புச் சட்டத்தை உடைக்க மோடி முயன்றார். அதனால்தான் இன்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் இங்கு காந்தி சிலை முன்பு ஒன்றுகூடி போராட்டம் நடத்துகிறார்கள். அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தின்படி செயல்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

பட்டையை கிளப்புமா ரெட்ரோ! முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்யுமா?

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…

10 minutes ago

சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

1 hour ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

2 hours ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

3 hours ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

4 hours ago

அறிவில்லாமல் இதை செய்யாதீங்க! டென்ஷனாகி இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…

5 hours ago