பீகாரில் உள்ள வைஷாலி மாவட்டத்தின் மெஹ்னாரில் சாலையோர மக்கள் கூட்டத்தில் டிரக் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
சுல்தான்பூருக்கு அருகில் உள்ள மாநில மகானார்-ஹாஜிபூர் நெடுஞ்சாலையில் புவையன் பாபாவின் பூஜை ஊர்வலத்தைக் காண மக்கள் கூடியிருந்தனர். இந்த கூட்டத்தின் மீது வேகமாக வந்த லாரி டிரக் மோதியதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர், மற்றும் பலர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவம் நடந்த சுல்தான்பூர் 28 தோலா பகுதிக்கு விரைந்து சென்று விபத்து குறித்து ஆய்வு செய்தனர். மேலும் காயமடைந்தவர்கள் ஹாஜிபூரில் உள்ள சதர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
இதுகுறித்து வைஷாலி காவல் கண்காணிப்பாளர் மணீஷ் குமார் கூறுகையில், “இறந்தவர்களில் குறைந்தது 4 பேர் குழந்தைகள் மற்றும் லாரி ஓட்டுனரும் விபத்தில் இறந்திருக்கக்கூடும் என்று தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த பிரதமர் மோடி காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமும் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…