பீகாரில் கோர விபத்து.! சாலையோர மக்கள் மீது டிரக் மோதி 12 பேர் உயிரிழப்பு.!

Default Image

பீகாரில் உள்ள வைஷாலி மாவட்டத்தின் மெஹ்னாரில் சாலையோர மக்கள் கூட்டத்தில் டிரக் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

சுல்தான்பூருக்கு அருகில் உள்ள மாநில மகானார்-ஹாஜிபூர் நெடுஞ்சாலையில் புவையன் பாபாவின் பூஜை ஊர்வலத்தைக் காண மக்கள் கூடியிருந்தனர். இந்த கூட்டத்தின் மீது வேகமாக வந்த லாரி டிரக் மோதியதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர், மற்றும் பலர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவம் நடந்த சுல்தான்பூர் 28 தோலா பகுதிக்கு விரைந்து சென்று விபத்து குறித்து ஆய்வு செய்தனர். மேலும் காயமடைந்தவர்கள் ஹாஜிபூரில் உள்ள சதர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இதுகுறித்து வைஷாலி காவல் கண்காணிப்பாளர் மணீஷ் குமார் கூறுகையில், “இறந்தவர்களில் குறைந்தது 4 பேர் குழந்தைகள் மற்றும் லாரி ஓட்டுனரும் விபத்தில் இறந்திருக்கக்கூடும் என்று தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த பிரதமர் மோடி காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமும் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்