மகாராஷ்டிராவில் இரும்பு கம்பம் விழுந்ததில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தின் பிம்ப்ரி-சின்ச்வாட் டவுன்ஷிப்பில் உள்ள ராவெட் கிவாலே பகுதியில் இரும்பு கம்பம் விழுந்ததில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்பகுதியில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது.
பலத்த காற்றிலிருந்து தஞ்சம் அடைவதற்காக மும்பை-புனே நெடுஞ்சாலையில் பதுக்கலில் சிலர் இருந்தனர். அப்போது, திடீரென சர்வீஸ் ரோடு அருகே இருந்த இரும்பு பதாகை (இரும்பு கம்பம்) சரிந்து விழுந்தது. அதில் சிக்கி 4 பெண்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
மேலும் 3 பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, இதில் வேறு யாரும் சிக்கியுள்ளார்களா என அப்பகுதி போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கம்பம் விழுந்ததில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதுபோலவே, இதே மாநிலத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு 40 அடி உயரம் கொண்ட பதுக்கல், பக்கத்து சாலையில் வாகனங்கள் மீது விழுந்ததில், 4 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…